ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் தங்களது பலத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு, டெல்லியில் நடைபெற்றது. ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா கொண்டுள்ள தீவிரமான கொள்கைக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் முழு ஆதரவை வழங்கின.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய தலைவர்கள் எத்தகைய காரணத்திற்காகவும் நடத்தப்படும் பயங்கரவாத செயல்கள் முற்றிலும் நியாயப்படுத்த முடியாதவை, குற்றவியல் பின்னணி கொண்டவை என்று கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
















