ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-ன் சோமாலியா பிரிவின் முக்கிய தலைவனான அபு பிலால் அல்-மினுக்கி அமெரிக்கப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த வெற்றிகரமான ராணுவ நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிபர் டிரம்ப், “அபு பிலால் அல்-மினுக்கி இனி இந்த உலகில் இல்லை என்றும் அவனால் இனி அப்பாவி மக்களை அச்சுறுத்தவோ, பயங்கரவாத செயல்களில் ஈடுபடவோ முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆபத்தான பயங்கரவாதியை ஒழித்த நமது அமெரிக்க ராணுவ வீரர்களின் வீரத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் எனது பாராட்டுகள் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட அபு பிலால் அல்-மினுக்கி, சோமாலியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மிக முக்கிய உத்தி வகுப்பாளராகவும், நிதி மற்றும் ஆள்சேர்ப்பு பிரிவின் தலைவனாகவும் செயல்பட்டு வந்ததாகவும் அமெரிக்க உளவத்துறை தெரிவித்துள்ளது.
















