நடப்பு கல்வியாண்டு முதல் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு மும்மொழி கல்வி கட்டாயமாக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் மும்மொழி கல்வி கற்க வேண்டும் என சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இரண்டு இந்திய மொழிகளை கட்டாயம் கற்க வேண்டும் என அறிவித்துள்ளது.
மூன்றவாது மொழியை மாணவர்கள் தங்களது விருப்பத்தின்படி தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மூன்றாவது மொழிக்கு பொதுத்தேர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
















