3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் மக்கள் தொகை கடும் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக பிறப்பு விகிதம், வெகுவாக குறைந்துள்ளது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, ஆந்திராவில் 3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு 40 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும வழங்கப்படும் என, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
















