அதிமுகவில் தான் ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என இபிஎஸ் நினைப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இபிஎஸ் நிலைப்பாடுகளால் அதிமுக வலுவிழந்து உள்ளதாக தெரிவித்தார்.
முதலமைச்சரை பொறுத்தவரை எல்லா நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார் என்றும், “பொறுப்பேற்ற உடனே 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியதை மக்கள் வரவேற்றுள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
“மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு ஆகியவற்றை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் என்றும், நெருக்கடிகளை சமாளிக்க கூடிய திறமை முதலமைச்சர் விஜய்க்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
















