தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிரந்தர சாய்தள வசதியை உறுதி செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
Jul 20, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிரந்தர சாய்தள வசதியை உறுதி செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
May 17, 2026, 09:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிரந்தர சாய்தள வசதியை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும், மாநில அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு கட்டடம் மட்டுமின்றி அனைத்து தனியார் கட்டடங்களும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் அடங்கும் என்றும்,
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தளம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதங்கள் அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் அரசு கட்டடங்கள், கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்தள வசதிகள் ஏன் ஏற்படுத்தி தரவில்லை என கேள்வி எழுப்பினர்.

நடந்து முடிந்த தமிழக தேர்தலில் கூட வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்ட கட்டடங்களில் நிரந்தர சாய்தளங்கள் அமைக்கும் பணிகள் முழுமையடையவில்லை எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள்,வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்படும் அரசு கட்டடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்தள வசதி ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும், மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் இணையதளங்கள் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags: permanent ramp facilitiesElection commissionmadras high courtdisabilitiespolling stations.
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவில் தான் ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என இபிஎஸ் நினைக்கிறார் – அமைச்சர் செங்கோட்டையன்

Next Post

சட்டமன்றத் தேர்தல் முடிவு சுனாமி போன்றது – ராஜேந்திர பாலாஜி

Related News

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies