பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தனது கார் ஓட்டுநருடன் சென்றுள்ளார். அடையாறு ஆற்றங்கரை அருகே சென்றபோது காரை நிறுத்தும்படி கூறியுள்ளார். பின்னர், காரிலிருந்த இறங்கிய அவர், சிறிது நேரம் நடை பயிற்சி செய்துவிட்டு வருவதாக ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
இந்தநிலையில், திடீரென பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலிறிந்த வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், ராஜனின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கே.ராஜன் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
















