இந்தியா இன்று புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி
Jul 18, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா இன்று புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
May 18, 2026, 06:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா இன்று புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருவதாக  பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக ஸ்வீடன் சென்றடைந்த பிரதமர் மோடி கோதென்பர்க் நகரில் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்சன் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செயற்கை நுண்ணறிவு, பசுமை போக்குவரத்து, நவீன உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து கோதென்பர்க் நகரில் நடைபெற்ற தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசியவர், இன்று, இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவுகள் ஒரு புதிய திருப்புமுனையை அடைந்திருப்பதாகக் கூறினார்.

வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கியப் பொருளாதாரமாக, இந்தியா இன்று ஒரு புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது எனக் கூறிய பிரதமர் மோடி, நமது இளம் மக்கள் தொகை, விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக தெரிவித்தார்.

இன்று, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலமைப்பை இந்தியா கொண்டுள்ளது எனவும் நமது ஸ்டார்ட்அப்கள் செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம், விண்வெளி, ட்ரோன்கள், உயிரி தொழில்நுட்பம், குற்றவியல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் உலகளாவிய தீர்வுகளை உருவாக்கி வருகின்றன என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது ஸ்வீடிஷ் ஓபரா பாடகி Charlotta Huldt, மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய புகழ்பெற்ற பக்திப் பாடலான “வைஷ்ணவ ஜன தோ” பாடலைப் பாடி அனைவரையும் கவர்ந்தார்.

இதுகுறித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் நிலையான சிந்தனைகள் உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன என கூறியுள்ளார். மேலும், மகாத்மா காந்தியின் கருத்துகள் அனைவரையும் சிறந்த உலகை உருவாக்க தூண்டட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஸ்வீடிஷ் ஓபரா பாடகி பாடிய வைஷ்ணவ ஜன தோ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் உயரிய, ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ் என்ற சிறப்புமிக்க விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. ஒரு நாட்டின் உயரிய தலைமைக்கு வழங்கப்படும் மிக சிறந்த அங்கீகாரம் மற்றும் கவுரவமாக இந்த விருது கருதப்படுகிறது. இது உலகளவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 31-வது விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Gothenburgprime minister modiEuropean Commission President Ursula von der LeyenSwedish Prime Minister Ulf Kristersson
ShareTweetSendShare
Previous Post

ஸ்வீடன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!

Related News

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies