அரசுமுறைப் பயணமாக ஸ்வீடன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, நெதர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரைச் சென்றடைந்தார். 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரதமர் மோடி ஸ்வீடனுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
ஸ்வீடன் வான்பரப்பில் பிரதமர் மோடியின் விமானத்திற்கு அந்நாட்டின் கிரிபென் (Gripen) போர் விமானங்கள் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் (Ulf Kristersson) அவரை நேரில் வந்து உற்சாகமாக வரவேற்றார். அப்போது ஸ்வீடன் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்கள் அளித்த அரசுமுறை மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
















