தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்கள் விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆக்ரோஷமாக இருக்கும் தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளனர்.
















