ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாகநராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடியும், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளராக அமுதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சத்யபிரத சாஹு நீர்வளத் துறை செயலாளராகவும்,
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன் மாற்றப்பட்டு, சமீரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித் துறை செயலராக சுசோங்கம் ஜடாக் சிருவும்
பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி.யாக இருந்த தினேஷ் பொன்ராஜ், குடிநீர் வழங்கல் வடிகால் மேலாண்மைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக ஆர்த்தியும்,
சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக ராகுல்நாத்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வள்ளலார் போக்குவரத்துத் துறை செயலராகவும், சென்னை மெட்ரோ குடிநீர் மேலாண் இயக்குநராக ஆனந்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலராக அனில் மேஷ்ராமும்,
வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை செயலராக கே.எஸ். பழனிசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்,பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை செயலராக தட்சிணாமூர்த்தியும்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
















