விருதுநகர் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து சேதமாகின.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் எதிரொலியாக சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து சேதமடைந்தன. பாதுகாப்பு கருதி மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதேபோன்று காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் தனியார் உணவகத்தின் சோலார் பேனல்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
















