இத்தாலி அதிபருடன் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்…
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இத்தாலி சென்றார். ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வில்லா டோரியா பம்பிலி அரண்மனைக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மிடுக்கான ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பிரதமர் மோடியும் – இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் அரண்மனை வளாகத்தில் நடந்து கொண்டே உரையாடினர். இருநாடுகளின் தூது குழுவினரை சந்தித்து ஆலோசனையும் மேற்கொண்டனர்.
முன்னதாக இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இருதரப்பு வர்த்தகம், முதலீடுகள் மற்றும் கலாசார தொடர்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்தும், AI, விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதும் குறித்து கலந்துரையாடினர்.
















