திமுக ஆட்சிில் நடந்த குற்ற சம்பவங்கள் தவெக ஆட்சியில் இரட்டிப்பாகி உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்து சிந்திக்காமல் கொள்கை முடிவு என பொத்தாம்பொதுவாக அமைச்சர்கள் பேசுவது நல்லதல்ல என தெரிவித்தார்.
முதலமைச்சர் அறையில் ரீல்ஸ் எடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், நாங்கள் ரீல்ஸை நம்புபவர்கள் கிடையாது ரியல் வாழ்க்கையை நம்புபவர்கள் என தெரிவித்தார.
பாஜக மீண்டு எழும்; 2031-ல் எங்கள் ஆட்சி என்ற இலக்கில் செயல்படுவோம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.
சனாதன தர்மம் குறித்து ஆதவ் அர்ஜூனா, முஸ்தபா குறித்த பேசுவதாகவும், இதனை முதல்வர் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி கொண்டிருந்தால் தவெகவுக்கு வாக்களித்த மக்களும் வருத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
















