சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் - எதிராக செயல்பட்ட காவல்துறை!
Sep 5, 2026, 05:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் – எதிராக செயல்பட்ட காவல்துறை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 07:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து வடபழனியில் உள்ள மாலில் வேலை செய்து வந்தார். அப்போது சூளைமேடு பகுதியை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி இந்து மதத்தை சேர்ந்த அந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாற்றியதாகவும் அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இளம்பெண்ணை ஏமாற்றிய சையது இப்ராஹிம், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முயன்றார். ராயபுரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், தனது ஆதரவாளர்களுடன் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, சையது இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். அவரை தரதர வென்று இழுத்துச் சென்றதுடன், சமூக ஆர்வலர் வளர்மதியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது…

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வந்த அப்துல் கரீம் என்பவரின் முகத்தில் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி கடுமையாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக காவல்நிலையம் சென்ற ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு, பொதுமக்களை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது என காவல் ஆய்வாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பணம் வாங்கிக் கொண்டு ஒருதலைபட்சமாக செயல்படாதீர்கள் என எம்எல்ஏ அறிவுறுத்திய நிலையில் அவரிடமே காவல் ஆய்வாளர் மிரட்டும் தொனியில் பேசினார்.. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Muslim youthmarriage stoppedSyed IbrahimChennaivadapalaniChoolaimeduErode District
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக மீண்டு எழும் ; 2031-ல் எங்கள் ஆட்சி என்ற இலக்கில் செயல்படுவோம் – தமிழிசை

Next Post

எரிபொருள் பற்றாக்குறையா? – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மறுப்பு!

Related News

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies