திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் செய்தியாளர் மீது போதைக்கும்பல் தாக்குதல் நடத்தியதை சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக ஆட்சியைப் போல தவெக ஆட்சியிலும் வன்முறை தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் போதைக் கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும் தொடர்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.
நடப்பது தவெக ஆட்சியா? அல்லது திமுக ஆட்சியா? என கேள்வி எழுப்பிய சீமான், இதுதான் மாற்று அரசியலா? எனவும் வினா தொடுத்துள்ளார்.
அத்துடன், விஜய் முதல்வராகப் பதவியேற்றதும் கையொப்பமிட்ட ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ என்ன செய்கிறது எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
















