தமிழக அமைச்சரவையில் மொத்தமாக 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் 4 பெண்கள் மற்றும் 7 பட்டியலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மாவட்டத்தில் வெற்றி பெற்ற 14 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.
ஜோசப் விஜய், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், ராஜ்மோகன், வெங்கட்ராமன், மரியவில்சன், குமார் என 7 பேர் அமைச்சர்களாக பதிவியேற்றுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து மொத்தம் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
சென்னையில் உள்ள 7 அமைச்சர்களுடன் சேர்த்து ஸ்ரீபெரும்பதூர் தென்னரசு, காஞ்சிபுரம் ரஞ்சித், தாம்பரம் சரத்குமார், அரக்கோணம் காந்திராஜ் உட்பட 11 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
பட்டியலினத்தை சேர்ந்த எழும்பூர் தொகுதி எம்எல்ஏ ராஜ்மோகன், அவிநாசி எம்எல்ஏ கமலி, முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனும் ராசிபுரம் எம்எல்ஏவான லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதேபோல் அரக்கோணம் எம்எல்ஏ காந்திராஜ், ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ மதன்ராஜ், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ தென்னரசு, மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
சிவகாசி தொகுதி எம்எல்ஏ கீர்த்தனா, அவிநாசி தொகுதி எம்எல்ஏ கமலி, குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி, ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை செங்கோட்டையன், அருண்ராஜ் , விஜய் தமிழன் பார்த்திபன், லோகேஷ் தமிழ்செல்வன், விஜயலட்சுமி, விஜய் பாலாஜி, சம்பத் குமார், விக்னேஷ், கமலி என 9 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் ரமேஷ், கடலூர் ராஜ்குமார், கும்பகோணம் வினோத், அறந்தாங்கி முகமது பர்வேஸ் ஆகிய நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை சி.டி.ஆர்.நிர்மல் குமார், பிரபு, ஜெகதீஸ்வரி, ராஜிவ், ஸ்ரீநாத், மதன்ராஜா என 6 தவெக அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன், ராஜேஷ் குமார் ஆகிய இருவர் என 8 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.
















