தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் குழந்தைகளை வைத்து தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், 29-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் தாராளமாக பணப் பட்டுவாடா நடைபெற்றதாகவும்,
சிறுவர்களை வைத்து தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டதாகவும் கூறி, கடலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தக் குற்றச்சாட்டுக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் மற்றும் தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உத்தரவிட்டனர்.
















