சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அமல்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அதிகாரப்பூர்வ பணியாளர்கள் முன்னிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அமல்ராஜ் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆணையர் அமல்ராஜ், முறைப்படி அலுவலக கோப்பில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார்.
















