மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கவும், பழுது ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவில், மருத்துவ கல்லூரிகள், மாவட்ட மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்வெட்டு ஏற்படாத வகையில் சீரான மின்சார வினியோகம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்வாரியம், பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள், ஊழியர்களை ஒருங்கிணைத்து சீரான மின்சார விநியோகத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
மருத்துவமனை பகுதிகளில் மின்தடை ஏற்படுவதை தடுக்க தேவையின் அடிப்படையில் புதிய மின்மாற்றிகளை பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும்,
பொதுப்பணித்துறை ஊழியர்கள் உதவியோடு ஜெனரேட்டர் மூலமாக சீரான மின்சாரத்தை வழங்க மற்ற துறை அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















