ஆப்பிரிக்காவின் உகாண்டா, காங்கோ, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால், இந்தியர்கள் யாரும் அந்நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற முறையில் பயணிக்க வேண்டாமென மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
மேலும், ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று திரும்பும் இந்தியர்கள் தாயகம் திரும்பினால், ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்தியாவில் இதுவரை எபோலா வைரஸ் பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
















