தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருக்கக்கூடிய கோயில்கள், மருத்துவமனைகள், இ-சேவை மையம் மற்றும் அரசு அலுவலகங்களில் அமைச்சர் ரமேஷ் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோயிலில் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய உணவு தரமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் அசுத்தமாக இருந்ததைக் கண்டு அதிருப்தி அடைந்த அவர், இனிவரும் காலங்களில் இது போன்று தவறு நடக்க கூடாது என எச்சரித்தார்.
















