கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரை முதலமைச்சர் ஜோசப் விஜய் செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.
சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கில் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
அப்போது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
















