கோவை சூலூரில் பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை, தமிழக அமைச்சர்கள் இருவர் நேரில் சந்தித்து 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் உடல் சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான உக்கம்பருத்தி காட்டில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தாரை, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டியிடம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவர்கள் வழங்கினர்.
அப்போது பூட்டிய அறையில் சிறுமியின் பாட்டியிடம் முதலமைச்சர் விஜய் செல்போனில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் தமிழன் பார்திபன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அரசு உறுதுணையாக நிற்கும் எனவும் தெரிவித்தார்.
















