பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
















