தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் 17 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை,சிறுவனை கொலை செய்த இடத்தின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்
அதில் தமிழகத்தில் போதைப்பொருள் கடத்துபவர்கள், பாலியல் குற்றவாளிகள், கொலைக்குற்றவாளிகள் உள்ளிட்டோர் சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும், கடந்த கால நிகழ்வுகளை கண்டும்கூட காவல்துறையினர் எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் புதிதாக ஆட்சியமைத்துள்ள தவெக அரசு கொண்டாட்ட மனநிலையில் இருந்து இன்னும் வெளிவரவில்லை எனக் கூறியுள்ள அவர்,களத்தில் அரங்கேறும் குற்றங்களை எதிர்கொள்ள தவெக அரசு தயாராகவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
















