நிலுவையில் உள்ள வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய பிறப்பித்துள்ள உத்தரவில்,உயர்நீதிமன்றங்கள் வழக்கை விசாரித்து ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை மூன்று மாதங்களுக்குள்ளாக வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதேபோல, ஜாமீன் உத்தரவுகள் வழக்கு முடிந்த அடுத்த நாளே வழங்கப்பட வேண்டும் என்றும்,அதே வேளையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாளில் உத்தரவின் விவரம் சிறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
வழக்கில் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்கள் ஜாமின் கிடைக்கப்பெற்றால் அதே நாளில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும்,அதிகபட்சமாக அடுத்த நாளே சம்பந்தப்பட்ட நபரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு தொடர்பான விளக்கம் என்பது ஏழு நாட்களுக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும்,வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட தேதியை உயர்நீதிமன்ற இணையதளத்தில் இடம்பெற செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வழக்கின் உத்தரவு அல்லது தீர்ப்பின் முழு விவரங்கள் 30 நாட்களுக்குள்ளாக பதிவேற்றம் செய்யப்படாவிட்டால், அந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த வழிகாட்டு உத்தரவை அனைத்து உயர் நீதிமன்றத்தின் பதிவாளர்கள் அந்தந்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது
















