ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆர்சிபி அணி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலாவதாக களமிறங்கிய குஜராத் அணி, ஆர்சிபி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியினர், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், ஆர்சிபி அணி வெற்றி இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஆர்சிபி அணி மகுடம் சூடியது. ஐபிஎல் தொடரில் வெற்றிபெற்ற ஆர்சிபி அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையும், 2-ம் இடம் பிடித்த குஜராத் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
















