நாகர்கோவில் பெண் ஆசிரியை கிரிஜா அம்மாவின் தேசபக்தி உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாகர்கோவிலில் பெண் ஆசிரியை கிரிஜாவை 30 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததாகவும், அவர் ஏறக்குறைய 15 பள்ளிகளை நிர்வகித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதில் சென்னையில் அமைந்துள்ள ஒரு பள்ளி முதன்மை கல்வி நிறுவனமாக திகழ்வதாகவும் கூறினார்.
இந்திய ராணுவ வீரர்களின் நலனுக்காக தானும் பங்களிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த கிரிஜா, மாணவர்களின் பங்களிப்பின் மூலம் சுமார் 40 லட்சம் ரூபாயை திரட்டி, அதற்கான காசோலையை தன்னிடம் ஒப்படைத்ததாக பிரதமர் தெரிவித்தார்.
அவருடன் உரையாடியபோது நாட்டின் மீது ஆசிரியைக்கு உள்ள பக்தி எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்து கொண்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
















