பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி மூல நட்சத்திரத்தையொட்டி திருஞானசம்பந்தர் பெருமானுக்கு ஞானப்பால் ஊட்டும் ஐதீக விழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சம்பந்தர் பெருமானுக்குப் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு பசியால் அழுத குழந்தையான சம்பந்தருக்கு அன்னை பெரியநாயகி பொற்கிண்ணத்தில் “ஞானப்பால் ஊட்டும்” ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















