தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட் பெறும் வசதியை கொண்டுவர இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் அறிவுறுத்தலின்பேரில், இந்த புதிய ஏற்பாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், இணையதளம் அல்லது செயலி வழியாக முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இதற்கென software தயாராகி வருவதாகவும், ஓரிரு மாதங்களில் முக்கிய கோயில்கள் சிலவற்றில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தரிசன முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அத்திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.
















