மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பது, வரும் சட்டமன்ற கூட்டத்தொடருக்குள் தடுத்து நிறுத்தப்படும் என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், தனியார் பார்களில் நடைபெறும் விதிமீறல்கள் தொடர்பாக பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், டாஸ்மாக் கடையில் மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பது, வரும் சட்டமன்ற கூட்டத்தொடருக்குள் தடுத்து நிறுத்தப்பட்டு, எம்.ஆர்.பி விலைக்குள் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் குறிப்பிட்டார்.
















