பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி செல்லவுள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நாளையும், நாளை மறுதினமும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி செல்லவுள்ளார்.
அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவர் சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது மத்திய அமைச்சர்கள் சிலரையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி ஆயோக் கூட்டம் முடிவடைந்ததும் நாளை மறுதினம் அவர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















