ஈரானுடன் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் இரு தரப்புக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தன.
ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், தற்போது தாக்குதல் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், பல நாடுகளின் முயற்சியால் ஈரானுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் மத்திய கிழக்கு நிலவரம் மீதான கவலை அதிகரித்துள்ளது.
















