முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து சுமார் 1 மணி நேரம் உரையாடினார். இன்று சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், முதலமைச்சருடனான வைகோவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாதென முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவின் நிலைப்பாடு என்ன என்றும், தவெகவுடன் மதிமுக கூட்டணி வைக்குமா எனவும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தியபின் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என வைகோ தெரிவித்தார்.
















