வெள்ளை அறிக்கையில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்காதது முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அதிருப்தியடைய வைத்துள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை இரு தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.
அதில், திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த நிதி முறைகேடு குறித்த விபரம் இடம்பெறாதது, தவெக அரசு மீது எதிர்மறையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதி விவகாரத்தில் திமுக அரசு செய்த தவறுகளை பட்டியலிட புதிதாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறை சார்ந்த அனுபவமில்லாததால் வெள்ளை அறிக்கை தயார் செய்வது சிரமமாகிவிட்டதாக தவெக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில் டெண்டர்களால் எவ்வளவு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படாததால் வெள்ளை அறிக்கையை தயார் செய்த அதிகாரிகள் குழுவுக்கு முதலமைச்சர் விஜய் ‘டோஸ்’ விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சட்டசபை கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கையில் விடுபட்ட பல விஷயங்களை முதலமைச்சரின் பதிலுரையில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தவெக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.















