மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை கொண்டு வருகிறார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அண்மையில் சந்தித்து, திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், தமிழகத்தை பாதிக்கும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தும் வகையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை தனி தீர்மானம் கொண்டு வருகிறார். கர்நாடகா அணை கட்ட சுற்றுச்சூழல் உட்பட எந்த அனுமதியையும் வழங்க கூடாது என மத்திய நீர்வளத்துறையை வலியுறுத்தும் வகையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் நாளை முன்மொழிகிறார்.















