திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 18 இடங்களில் அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், திருவண்ணாமலை தென்மாத்தூர் பகுதியில் உள்ள வீடு மற்றும் அருணை கல்லூரி வளாகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கல்லூரி வளாகத்திற்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
















