திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் - போக்குவரத்து மாற்றம்!
Aug 5, 2026, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடப்படும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அதிக போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. இச்சாலையில், காவிரி ஆற்றின் குறுக்கே பழமையான பாலம், புதிய பாலங்கள் உள்ளது. மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் சாலையில் ஒரு வழிபாதையாக பழைய காவிரி பாலமும், சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை, நெல்லை செல்லும் வாகனங்கள் அனைத்தும் புதிய பாலத்தின் வழியாக ஒரு வழிப்பாதையில் செல்கின்றது.

இதுதவிர, மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களும் போக்குவரத்துக்கு இப்பாலங்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி ஸ்ரீரங்கம் இடையே அமைந்துள்ள பழைய காவிரி பாலத்தை வலுப்படுத்தும் பணிகள் பராமரிப்பு வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காவிரி பழைய பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நேற்று ஜூன் -25 ஆம் தேதி நள்ளிரவு முதல் பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் திருச்சி – சென்னை தேசிய நெஞ்சாலையில் அமைந்துள்ள பழைய காவிரி பாலம் கட்டப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டாலும், அதில் உள்ள பேரிங்குகள் சேதமடைந்துள்ளது. அதனால், பாலம் முழுக்க உள்ள 170 பேரிங்குகள் முழுமையாக மாற்றி, பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளவும், 3 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுவரை, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் ஸ்ரீரங்கம் பகுதிகளை இணைக்கும் பழைய காவிரி பாலம் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம் :

பராமரிப்பு பணிகளுக்காக பாலம் மூடப்பட உள்ளதால், திருச்சியிலிருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி பாலம், கொண்டையம்பேட்டை வழியாகவும், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் சா்க்காா்பாளையம் அணுகுசாலை, கொண்டையம்பேட்டை, புதிய காவிரி பாலம், சஞ்சீவி நகா் வழியாகவும் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: maintenance workTraffic Diversionold Cauvery Bridge closeTrichy-Chennai National Highwaytrichy
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

Next Post

ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட பணி டெண்டர்கள் ரத்து – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies