செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா - பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!
Aug 17, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 1, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் செஷல்ஸ் பயணம் அந்நாட்டிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ரோந்து கப்பல், ராணுவ ஆலோசகர்கள் நியமனம் என இரு நாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்….

இந்திய பெருங்கடலில் தீவு நாடாக அமைந்துள்ள செஷல்ஸிற்கு மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றார். இந்தப் பயணம் வெறும் தூதரக சடங்காக இல்லாமல், இருநாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பை வளர்ச்சிப் பயணத்தில் கொண்டு செல்வதாக அமைந்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப கூட்டாண்மை ஆகியவற்றில் ஒரு பெரிய விரிவாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செஷல்ஸ் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் 4 ராணுவ ஆலோசகர்கள் நியமனம், தற்போதைய பயணத்தின் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இவர்கள் 4 பேரும் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ நிறுவனங்களுடன் இணைந்து, திட்டமிடல் மற்றும் பயிற்சிப் பணிகளை மேம்படுத்த உள்ளனர். இந்த நடவடிக்கை இந்திய பெருங்கடல் பகுதியில் செஷெல்ஸின் முதன்மையான பாதுகாப்பு பங்காளியாக இந்தியா திகழ்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன எல்ஸ்போயர் ரோந்து கப்பல், 10 லேசர் ரேடியல் படகுகள், 5 ரோந்து வாகனங்கள் மற்றும் 6 ஆம்புலன்ஸ் வாகனங்களை செஷெல்ஸ் நாட்டிற்கு வழங்கியது இந்தியா. இதன் மூலம் அந்த நாட்டின் கடல் எல்லை கண்காணிப்பு மேலும் வலுவடையும். செஷெல்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த கடல் மற்றும் வான்வழிப் பாதுகாப்பு சொத்துக்களில் பாதிக்கும் மேல் இந்தியா வழங்கியவை. செஷெல்ஸ் ராணுவ வீரர்களுக்கான ஒட்டுமொத்த பயிற்சியில் 70 சதவீதத்தை இந்திய ராணுவ கல்வி நிறுவனங்களே வழங்கி வருகின்றன.

இந்த இருதரப்பு கூட்டாண்மை, பாரம்பரிய பாதுகாப்பு ஒத்துழைப்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கும் பரிணமித்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழமாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்தியா – செஷல்ஸ் இடையே சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, விண்வெளி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன.
செஷல்ஸ் உட்கட்டமைப்பு மற்றும் உணவு தேவைகளுக்காக 500 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 8,500 மெட்ரிக் டன் சிமெண்ட் ஆகியவற்றையும் இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியா இனி செஷெல்ஸ் நாட்டிற்கு சாதாரண உதவி வழங்கும் நாடு அல்ல. மாறாக, அந்நாட்டின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் ராணுவக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. இதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ராஜதந்திர கை ஓங்கியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை…

Tags: patrol vesselSeychelles securityfour Indian military advisors'Lspoyer' patrol vesselIndian OceanPrime Minister Modi's visit.Seychelles
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – இபிஎஸ் பேச்சு!

Next Post

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் – முதலமைச்சர் விஜய் உறுதி!

Related News

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies