தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய் தலைமையில், தோழமைக் கட்சிகள் உடனான முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது தவெக ஆட்சி அமைக்க உதவிய தோழமை கட்சிகளுக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்கும் எனவும் எத்தகைய சாவல்களையும் எதிர்கொள்ள தயார் எனவும் கூறினார்.
தவெக தற்போது வலிமையான கட்சியாக உள்ளது எனவும் பல ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி நிலைத்து நிற்கும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
தவெக தலைமையில் அமைய உள்ள கூட்டணியின் பெயரை அடுத்த கூட்டத்தில் அறிவிப்பேன் எனவும் தோழமை கட்சிகளை ஒருங்கிணைக்க குழுவை உருவாக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார்…
















