125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 3, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் 125 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா இடிக்கப்பட்ட சம்பவம் சீக்கியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 125 ஆண்டுகள் பழமையான புனிதமான சீக்கிய வழிபாட்டுத் தலமான ‘குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா சாஹிப்’ இடிக்கப்பட்டுள்ளது.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீக்கிய சீர்திருத்த இயக்கமான ‘சிங் சபா இயக்கத்துடன்’ தொடர்புடைய மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும்

குருத்வாரா இருந்த நிலம் தனக்கு சொந்தமானது என்ற உரிமையில் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து தேவையான தடையில்லாச் சான்றிதழைப் பெறாமலேயே உள்ளூர் தொழிலதிபர் அந்த குருத்வாராவை இடித்துள்ளார்.

அப்பகுதி சீக்கியர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து பஞ்சாப் சிறுபான்மையினர் துறை அமைச்சர் ரமேஷ் சிங் அரோரா ஃபாரூகாபாத்தில் உள்ள குருத்வாரா சிங் சபாவைப் பார்வையிட்டு, அதனை உடனடியாக மீண்டும் சீரமைப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் குருத்வாரா சிங் சபா அமைந்துள்ள நிலத்தின் உரிமை மற்றும் நிலை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு வக்ஃப் துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீக்கிய சீர்திருத்த இயக்கமான ‘சிங் சபா இயக்கத்துடன்’ தொடர்புடைய மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும்.

இதற்கிடையே புனிதமான சீக்கிய வழிபாட்டுத் தலத்துக்கு எதிராக பாகிஸ்தானில் நடந்த இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு திட்டமிட்ட வன்முறைச் செயல் என்று இந்தியா கண்டித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வ அறிக்கையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் தொடர்ச்சியாகக் குறிவைத்துத் தாக்கப்படுவது ஆழ்ந்த கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி, இழிவான செயலைச் செய்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் சேதமடைந்த குருத்வாராவை விரைவில் சீரமைக்குமாறும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறும் பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வெளிப்படையான கண்டன அறிக்கையை வரவேற்றுள்ள பல சீக்கிய அமைப்புகள், ராஜதந்திர வழிகள் மூலம் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்புப் பிரச்சினையை வலுவாக எழுப்பிய மத்திய அரசைப் பாராட்டியுள்ளன.

நீண்ட காலமாகவே பாகிஸ்தானில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுவதும் சேதப்படுத்தப்படுவதும் தொடர்கதையாக உள்ளன.

க்ஷகும்பல் வன்முறை, மதக் கலவரம், சட்டவிரோத சொத்து தகராறுகள், இறைநிந்தனைக் குற்றச்சாட்டுகளால் சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப் படுகின்றன.

குறிப்பாக சிந்து, பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.

2023 முதல் 2025 ம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் வசிக்கும் சிந்துப் மாகாணத்தில் இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்துள்ளன.

குருநானக்கின் பிறந்த இடமான நான்கானா சாஹிப்பில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜனம் அஸ்தான் குருத்வாராவும் பலமுறை தாக்குதல்களுக்கு குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் மட்டுமில்லாமல் பெஷாவர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பல சீக்கிய வணிகர்களும் கடைக்காரர்களும் மத வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதக் கருத்துக்களைத் தூண்டுவதற்காக காலிஸ்தான் பயங்கரவாத சக்திகளுக்கு பாகிஸ்தானின் ISI தொடர்ந்து நிதி, பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. அதே நேரம் பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாராக்களை எல்லாம் அழித்து வருகிறது.

Tags: Sikh community.Pakistan's Punjab provinceSabha MovementSikh reformist movementpakistanlahoredemolition of a historic125-year-old Gurdwara
ShareTweetSendShare
Previous Post

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

Next Post

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies