முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த 20ம் தேதி திமுக சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் ஜோசப் விஜயை அவதூறாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்குமாறு அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். பின்னர் தூத்துக்குடி எஸ்.பி.,அலுவலகத்தில் அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றபோது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு போலீசார் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம்சாட்டினார்.
















