தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!
Aug 5, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ஒரு மாதம் தீவிர போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிறப்பு நடவடிக்கையின்போது போதைப்பொருட்களை பறிமுதல் செய்வதுடன், அதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மாவட்டங்களில் நடைபெறும் நடவடிக்கைகளை மண்டல ஐஜிக்கள் மற்றும் காவல் டிஐஜிக்கள் நேரடியாக கண்காணித்து காவல்துறையினருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும்,

ஒரு மாத கால நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மற்றும் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாநில அளவிலான சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றும்,

மாவட்ட மற்றும் மாநகர காவல் அதிகாரிகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடவடிக்கை அறிக்கையை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சிறப்பு நடவடிக்கையை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி ஒருங்கிணைத்து கண்காணிக்க வேண்டும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Tags: special operationDGP Mahesh Kumar Aggarwaleradicate drug traffickingPolice CommissionersDistrict Superintendents of Police
ShareTweetSendShare
Previous Post

பள்ளி கல்வி ‘செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!

Next Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் 90 % நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies