தவெக ஆட்சி முடியும்போது 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் தமிழ்நாட்டின் கடனை, நாம்தான் அடைக்கப் போகிறோம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு WE THE LEADERS என்ற அமைப்பை அண்ணாமலை தொடங்கினார். இந்த அமைப்பில் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் WE THE LEADERS அமைப்பின் முதல் மாநில மாநாடு கோவை பொள்ளாச்சியில் நடைபெற்றது. போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொண்டர்கள் புடைசூழ வந்த அண்ணாமலை, மேடையில் ஏறியதும் கீழே இருந்தவர்களை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
இதையடுத்து மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, இன்னொரு தலைவரை குறைசொல்லவோ, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளவருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காகவோ இந்த மாநாடு நடைபெறவில்லை எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு வாங்கி வைத்துள்ள 10 லட்சம் கோடி ரூபாய் கடன், தவெக ஆட்சி முடியும்போது 15 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனவும் அதனை நாம்தான் அடைக்கப்போகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
















