மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், காவிரியில் கர்நாடகா அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதிலை திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் கருத்து ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது என்றும், மேகதாது அணை திட்டத்துக்கு எந்தவித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
காவிரி என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் எனக்கூறியுள்ள முதலமைச்சர் விஜய், கடைமடை மாநில அனுமதியின்றி மேலே உள்ள மாநிலம் அணை கட்ட முடியாது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீரின் அளவு, நீர்வரத்து சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது அணைக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் தரக்கூடாது என்றும், கீழ்பாசன மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவை பாதிக்கும் திட்டத்தை ஒப்புதலின்றி செயல்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும், மேகதாது அணை திட்டத்துக்கு எந்தவித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது எனவும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
















