குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம்
Aug 7, 2026, 12:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 5, 2026, 07:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடந்ததாக, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டதுடன், ரமேஷ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள சேதுராஜ் மற்றும் கார்த்திக்கும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது, காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், எனவே வழக்கை சிபிஐ அல்லது வேறு சுயாதீன விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, பொய் வழக்கு ஜோடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், வழக்கில் தேவையான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குதிரை பேரம் வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: madras high courtinterim stayTVK governmentTVK MLAhorse-trading investigaion
Share
Tweet
SendShare
Previous Post

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

Next Post

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies