கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கர்நாடக வனத்துறையினரால் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிப்பதாகவும்,
இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறை அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதல்ல எனக் கூறிய அவர்,
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும்,
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
















