வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் நடைபெற்ற ‘யுனிவர்சல் ஒன்நெஸ் செலிப்ரேஷன்’ நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர்கள் மேடையில் ஒன்றுகூடினர். தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. அதனை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் மேடையில் கூடியிருந்த பல்வேறு ஆன்மிகத் தலைவர்கள் கண்டு ரசித்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாம் அனைவரும் ஒன்றே என்றும், வேற்றுமையில் ஒற்றுமைமேலும் அழகுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.
















