நிலவில் ஆதிக்கம் : நிரந்தர விண்வெளி நிலையம் அமைக்க சீனா ஆர்வம் - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் ஆதிக்கம் : நிரந்தர விண்வெளி நிலையம் அமைக்க சீனா ஆர்வம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2050ம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா, அடுத்த ஆண்டிலிருந்து செயற்படுத்த இருக்கும் விரிவான மேம்பாட்டுத் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1969ம் ஆண்டு தொடங்கி 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் 10 அமெரிக்கர்கள் சந்திரனில் தரையிறங்கியுள்ளனர். அதன்பிறகு, மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

அரை நூற்றாண்டுக்கும் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை, அமெரிக்கா மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் நிலவு பயணத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியிருக்கின்றன.

2035-ஆம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கவும், 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று செயல்பட்டு வருகிறது.

சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை, நீண்டகால விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திர விண்வெளி நிலையத்தை உருவாக்கவும் மற்றும் கிரகங்களில் மனிதன் வாழக் கூடிய சாத்தியக்கூறுகளை ஆராயவும் தனது லட்சியத் திட்டங்களாக சீனா அறிவித்துள்ளது.

அதன்படி, சீனாவின் சந்திர விண்வெளி நிலையம், 2028 மற்றும் 2035 ஆண்டுக்குள் பகுதி பகுதியாக கட்டி முடிக்கப்படும் என்று தெரிய வருகிறது. 2035 ஆம் ஆண்டுக்குள், முதல் கட்டமாக அடிப்படை ஆராய்ச்சி வசதி நிறுவப்படும் என்றும்,இரண்டாம் கட்டம், 2045 இல் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

நிலவில் விண்வெளி நிலையம், எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கு ஒரு தளமாக செயல்படும் என்றும், சந்திரன் மட்டுமின்றி, சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களையும் ஆராய பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திர விண்வெளி நிலையம், எதிர்காலத்தில் இன்னும் மேம்பட்ட விண்வெளி முயற்சிகளுக்கான தயாரிப்புகளும், சோதனைகளும் நடத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், சீனாவின் இந்த திட்டம் பிரபஞ்சம் மற்றும் சூரிய குடும்பத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிய வருகிறது.

2050ம் ஆண்டுக்குள் விண்வெளி அறிவியலில், முதன்மை நாடாக திகழும் நோக்கத்தில் சீனா இந்த திட்டத்தில் இறங்கியுள்ளது.

உலகத்தில், நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக மட்டும் அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகவே.

தற்போது, நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான முயற்சியாகவே, சீனாவின் நிலா பயணத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் சீனா உருவாக்கி வருகின்றது.

21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் கோலோச்சக் கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று அந்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: space stationApollo missions.etailed development planunar missions.china
ShareTweetSendShare
Previous Post

வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் சிறுமி உயிரிழப்பு – சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்!

Next Post

கரூர் அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை!

Related News

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More

அண்மைச் செய்திகள்

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies